தொடர்ச்சி...
நட்சத்திரா
என்னை
அனைத்துக் கொள்வாயா
என்றேன்..
அவளுள்
எதோ நிகழ்ந்திருப்பதை
அவளின் ஸ்பரிசம் உணர்த்திற்று
ஆம்
என்னை அணைத்துக்கொண்டாள்
அது போலவே
அவளின்
கண்களையும்
பார்வையையும்
அவளின் துப்பட்டா
அனைத்துக்கொண்டிருந்தது
நான்
பிறந்ததிலிருந்து
அதுவரை
செத்துக்கொண்டே
வாழ்ந்ததுமில்லை
வாழ்ந்துக்கொண்டே
செத்ததுமில்லை
அப்படியே இருந்திருந்தாலும்
அந்நிலையில்
வாகனமியக்கியதுமில்லை
ஒரு ஏகாந்த சூழலில்
எதுவென்று தெரியாத
இலக்கு வந்துக் கொண்டிருப்பதோ
தனிமையின்
இருட்டுக் காலை
போய்க்கொண்டிருப்பதோ
எங்கனம் உணருவது நான்...
என்னவென்று சொல்ல
எனக்குப் புரியவில்லை
தூங்கும் போதா
சிரிக்கும் போதா
பேசும்போது,
மௌனத்தின் போதா.....
எதுதான் அவளது
நிஜமான அழகு?
ஆனால்
இப்போது
வெட்கப்படும்போதுதான்
அழகென்றுத் தோன்றியது...
மரத்தின் சதை துளைத்து
உலகை அடைந்த
தளிர் போல
என் நெஞ்சின்
சதை துளைத்து
காதலை அடைந்தவள்
எப்படிச் சிவக்கிறாள்
அடடா...
சூரியன்
வந்துக்கொண்டிருந்தது...
எங்களை
வரவேற்கவா
துரத்தவா...
புரியவில்லை.
இத்தனைக் கலவரங்கள்
ஏதும் புரியாமல்
சாத்தானின்
முடிவு தெரியுமுன்பே
தூங்கிவிடும்
குழந்தையைப்போல
அவள் தூங்கிவிட்டிருந்தாள்
என்பதை
நான்
ஒருமையில்
பல வார்த்தைகள்
பேசிக்கொண்டிருந்தபோதுதான்
உணர்ந்தேன்...
அவள்
எனது தோளில்
தலை சாய்த்திருந்தாள்
என் தோள்கள்
பூக்குவியல்களால்
ஆனதில்லையே
என்று
முதன் முதலாக
வருந்தினேன்
( தொடரும் )...
காதலியைத் தூங்கவைக்க உங்கள் தோளைப் பூக்குவியல்களாக்கும் திட்டம் அழகு.கொடுத்தவைத்தவர் உங்கள் காதலி !
ReplyDeleteமரத்தின் சதை துளைத்து உலகை அடைந்த தளிர் - வர்ணிக்கும் வார்த்தைகளில் மனம் சொக்குகிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் திண்டாடச்செய்யும் காதல் அவஸ்தையும் சுகம், பூக்குவியலொன்று தோள் தொட்டு, தீ மூட்டும்போது.
ReplyDeleteஹேமா
ReplyDeleteகீதா...
உங்கள் தொடர்தல் நான் கவனமாய் இயங்கவேண்டிய
அவசியத்தையும் உணர்த்துகிறது,
மனம் நிறைந்த நன்றிகள்.