தொடர்ச்சி...
படித்து வந்தாயா
எனும் ஆசிரியரிடம்
மாணவனின் மௌனம்
பல வார்த்தைகள் பேசக்கூடும்
வண்டுகளிடம்
பூக்களின் மௌனம்
வெட்கம்
ஆனால்
இங்கே
அவளின் மௌனம்
அவள் நெகிழ்ந்திருப்பதை
சொல்லியது
என்னதான்
மௌனம்
சுகமானதென்றாலும்
அவளின்
சிவந்தப் பேச்சின்
சௌந்தர்யம்
வேறேதனில் வந்துவிடக்கூடும்
அதனால்...
பூவிதழ்களை
சிறகசைப்பில் களை(லை)க்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல
நானந்த
மௌனத்தைக் களை(லை)த்தேன்
அடி சகி
ஒரு மெழுகைப்போல
நீ உருகுவது
எனக்குப் புரிகிறது
ஆனால்
நீ உருகினால்
எனக்கு வெளிச்சம் வருமா
புரியாதா...
அப்படியானால்
நான் உருகுவது
உங்களுக்கு இருளைத் தருகிறதா
இல்லையில்லை
அப்படியில்லை
விம்மும் குழந்தையிடம்
எந்த தாயும்
உருகிக்கொண்டிருப்பதில்லை
என்பதை உணர்த்தினேன்
அவ்வளவுதான்...
அவளென்
விரல் தொட்டாள்
என் ஒவ்வொரு செல்லிலும்
கூடு கட்டியிருந்த
கூட்டுப்புழுக்கள்
கூடு கிழித்து
சிறகசைப்பதாய் உணர்ந்தேன்
( தொடரும் )...
ம்...ம்...பேச்சில்லை !
ReplyDelete