Pages

Monday, January 30, 2012

நதியில் தவறிய துளி - 13

தொடர்ச்சி
என்னவளே
நான் கொடுத்துவைத்தவன் 

எதற்க்காக
அப்படிச் சொல்கிறீர்கள்

உண்மைதானடி

நீருக்கு தவித்திருந்த பயிர்களுக்கு
வேர்களில் பொழிந்துவிட்ட
மழையைப் போல் 

ஆனால் நான் 
தாபத்தில் தவிக்கும் முன்பே 
நீஎனக்கு காதல் மழை பொழிந்தாய் 

நான் உன்னை கண்டபின்தான்
கண்களுக்கு பார்வை 
அவசியமென்று உணர்ந்தேன்

எதற்க்காக என்னை
கடனாளியாக்குகிறீர்கள்

என்ன 
கடனாளியாகவா 

ஆம்

நீங்கள்
தொடாமலேயே முத்தமிட்டதாய்
உணர்த்த உங்களுக்கு 
உங்களின் நெகிழ்ந்த வார்த்தைகள்
போதுமாயிருக்கிறது

ஆனால்
உங்கள் புலன்களனைத்திலும்
நான் புழங்குவதாகச் சொல்கிறீர்கள்
என்னால் உங்களுக்கு 
அப்படி முடியவில்லை

எத்தனை முறை 
திடுக்கிட்டெழுந்தாலும் 
இரவில் என்னை 
உறக்கத்திற்கு பதில்
உங்கள் வார்த்தைகள்தான்
தழுவிக்கொண்டிருப்பதாய்
தோன்றுகிறது

இத்தனைக் காலம்
உங்களை உதாசினத்துக் கிடந்தததில்  
வாழ்க்கை என்னை
விலக்கியிருந்ததை
புரியாமல் கிடந்தேன்

தன்னுடைய அவஸ்த்தையை
வண்டிற்கு உணர்த்தத் துடிக்கும்
பூவைப் போல

நீங்கள் என் மீதுக் கவிழ்த்த
சுகங்களின் அலாதியை
நான் உங்களுக்கு உணர்த்த முடியவில்லை

அதனால் தான்
சொல்கிறேன்
என்னை கடனாளியாக்காதிர்கள்....

( தொடரும் )...


2 comments:

  1. காதலிலும் கடனா.ஒருவேளை அதுதான் சுகமோ !

    ReplyDelete